News December 31, 2024
முதலமைச்சரை இந்தியாவே இன்று திரும்பி பார்க்கிறது

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இரண்டாம் நாள் விழா இன்று(டிச.31) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார் அப்போது வள்ளுவர் புரட்சி செய்தவர், அரசர்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பேராசான் அந்த வழியில் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
Similar News
News December 30, 2025
குமரி: காரில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல்!

குமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது சம்பந்தமாக வட்ட வழங்கல் அதிகாரிகள் வாவறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். சோதனையின் போது நிற்காமல் சென்ற சொகுசு காரை துரத்தி சோதனை செய்ததில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 30, 2025
குமரி: நிலங்களை சரிபார்க்க – இதை பண்ணுங்க

குமரி மாவட்டத்தில் உள்ள நில உரிமை, சிட்டா, நகர நில அளவை விவர பதிவேடுகள், பட்டா விவரங்களை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை சரி பார்க்க எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள் உள்ளன. இங்கு <
News December 30, 2025
குமரி: மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட அரசியல் பிரமுகர்

அருமனை பாண்டியன் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (54). இவர் ஜனதா தளம் தலைவராக உள்ளார். இவர் நேற்று (டிச.29) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மாடு இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜாண் கிறிஸ்டோபர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினர்.


