News December 31, 2024
முதலமைச்சரை இந்தியாவே இன்று திரும்பி பார்க்கிறது

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா இரண்டாம் நாள் விழா இன்று(டிச.31) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார் அப்போது வள்ளுவர் புரட்சி செய்தவர், அரசர்களுக்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த பேராசான் அந்த வழியில் இன்று தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவே அவரை திரும்பி பார்க்கிறது என்று புகழாரம் சூட்டினார்.
Similar News
News October 19, 2025
குமரியில் ஒருவர் தற்கொலை

நித்திரவிளை கிளாச்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (68) கொத்தனார். நோயால் பாதிக்கப் பட்டு உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதரன் அக்.16ம் தேதி இரவு பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு, மயங்கி கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் நேற்று (அக்.17) வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News October 19, 2025
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புது நடை மேடைகள் தயார்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை மூன்று நடை மேடைகள் உள்ளன. தற்போது புதிதாக நான்கு மற்றும் ஐந்தாவது நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமேடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதற்கான பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது இந்தப் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் நடைமேடை பயன்பாட்டிற்கு வரும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 19, 2025
குமரி: பள்ளி மாணவிகள் விண்ணப்பியுங்க

குமரி ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: குமரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என 7 விடுதிகள் உள்ளன. இதில் அழகப்பபுரம் சமூக நீதி விடுதியில் 33 காலியிடங்கள் உள்ளன. தகுதி உடைய மாணவிகள் விடுதிகாப்பாளர் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் இருந்து பெற்று விண்ணப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.