News February 17, 2025
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்ட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (17.02.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவியாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை நிலகிரி தெற்கு தோட்டம் கிராமத்தினை சேர்ந்த செல்வன் பிரகதீஸ்வரன் என்பவர் கல்லணை கால்வாய் புது ஆற்றில் மூழ்கி இறந்ததால் நிதி உதவியை அவரது தந்தையிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Similar News
News December 15, 2025
தஞ்சை: குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த புஷ்பவல்லியின் பேத்தி ரம்யா (20), மன்னார்குடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை புதுக்குளத்தில் குளிக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது குளத்தில் பிணமாகக் கிடந்தார். ஒரத்தநாடு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
News December 15, 2025
தஞ்சை: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
தஞ்சாவூர்: வாகனங்கள் பொது ஏலம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகம், கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களை டிச.22ம் தேதி பழைய ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடவுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் அன்றைய தினம் காலை 7 மணி முதல் முன்வைப்புத் தொகை செலுத்தி, ஆதார் அட்டை நகலுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் (டிச.26) ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.


