News September 14, 2024
முதலமைச்சரின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் செப் .18 தேதி அன்று ஆம்பூர் வட்டம், வடபுதுப்பட்டுஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .க.தர்ப்பகராஜ், செப் .18 தேதி அன்று காலை 09.00 மணிமுதல் செப் .19 தேதி அன்று காலை 09.00 மணிவரை அப்பகுதியில் தங்கி அரசு வழிகாட்டுதலின்படி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். செப்.18 ஆம் தேதி அன்று தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து மேலும் வடபுதுப்பட்டு ஊராட்சியில் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்
Similar News
News November 24, 2025
பெட்ரோல் ஊற்றி வெடிப்பு ரீல்ஸ் செய்த வாலிபர் கைது!

ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் சின்ன கவுண்டர் வட்டம் சேர்ந்தவர் குமரேசன் (வயது 21) இவர் கடந்த தீபாவளி அன்று தனது வீட்டின் அருகே சாலையில் கவரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வெடித்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் இளைஞர் பதிவு செய்தார். இதனை அடுத்து இன்று (நவ.24) ஜோலார்பேட்டை போலீசார் சாலையில் ரீல்ஸ் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 24, 2025
திருப்பத்தூர்: அமமுகவினர் காவல் நிலையத்தில் கோரிக்கை!

திருப்பத்தூர், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இன்று (நவ.24) அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகர செயலாளர் R.K கோகுல்ராஜ், இணைச் செயலாளர் G. வெங்கடேசன், துணைச் செயலாளர் M. கரிகாலன், பொருளாளர் S. அருண் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெறுவதற்காக கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.
News November 24, 2025
திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க..


