News August 7, 2024
முசிறி அருகே பாலப்பட்டியில் விவசாயி வெட்டிக்கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இதே ஊரை சேர்ந்தவர் அழகேசன் (50) இருவரும் ஒரே கேணியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது நிலையில் பழனிச்சாமியின் மரத்தை அழகேசன் வெட்டியதாகவும் அது குறித்து கேட்டதற்கு அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
திருச்சி: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20-28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 28, 2025
திருச்சி: 23.13 லட்சம் எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 23,68,967 வாக்காளர்களில் நேற்று (நவ.27) மாலை நிலவரப்படி 23,13,892 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 18,02,100 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி: டிட்வா புயல் எச்சரிக்கை – கலெக்டர்

‘டிட்வா’ புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் 154 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புயல், மழை தொடர்பான புகார்களை 1077 என்ற எண் அல்லது 0431-2418995 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


