News August 18, 2024
முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Similar News
News November 4, 2025
செங்கல்பட்டு: வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து மற்றும் ஒரு ஈச்சர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆம்னி பேருந்து டிரைவருக்கும் ஈச்சர் வாகனம் ஓட்டிய டிரைவருக்கும் கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 4, 2025
செங்கல்பட்டு: நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் மாயம்

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைப் அலிக்கான் இவர் திம்மாவரம் பகுதியில் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட்’ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திம்மாவரம் பகுதியிலுள்ள பாலாற்றில், தனது நண்பர்கள் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டார். கடந்த 2 நாட்களாக தேடியும் உடல் கிடைக்கவில்லை இதனால் இன்றும் இவரது உடல் தேடப்பட உள்ளது.
News November 4, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-03) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


