News April 16, 2025
மீன் பிடிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்பு

கொங்கவேம்பு அருகே உள்ள வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 35). இவர் நேற்று மது போதையில் அங்குள்ள கிணற்றில் இறங்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழூந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்புத் துறையினர் கோவிந்தசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
தர்மபுரியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா

அரூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் இன்று(நவ.27)
1. காலை 10.00 – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொக்கரப்பட்டி.
2. மதியம் 12.30 – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கீரைப்பட்டி,
3. மதியம் 2.00 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வேப்பம்பட்டி
4.மதியம் 2.30 –
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாம்பாடி
என நடைபெறுகின்றன.
News November 27, 2025
தர்மபுரியில் இது நடக்குமா..?

தர்மபுரி – பெங்களூரு புறவழிச் சாலையில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலையில் செல்லும் பஸ்களில் வருபவர்கல் எளிதாக வந்து செல்ல தடங்கம் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள இணைப்பு தார்சாலை, கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுப்படுத்த அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது. இது விரைவில் நடக்குமா? என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 27, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.26) இரவு – இன்று (நவ.27) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதிஷ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் ஜீலான்பாஷா, மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


