News April 16, 2025

மீன் பிடிக்க சென்ற வாலிபர் சடலமாக மீட்பு

image

கொங்கவேம்பு அருகே உள்ள வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 35). இவர் நேற்று மது போதையில் அங்குள்ள கிணற்றில் இறங்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழூந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்புத் துறையினர் கோவிந்தசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

தருமபுரி: மனைவியை கொல்ல முயன்ற கணவன்-7ஆண்டு சிறை!

image

நல்லம்பள்ளி,எள்ளுகுழி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், இவரது மனைவி மணிமேகலை. கடந்த 2022 ஆண்டு ஆக-14, இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மணிமேகலையை வெட்டியுள்ளார். மேலும், மணிமேகலை சிகிச்சைபெற்று குணமடைந்த பின்னர், வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதன்படி, நீதிபதி ஹசினாபானு இன்று (நவ.28) குற்றவாளியாக பெருமாளுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் விதியத்துள்ளார்.

News November 28, 2025

தருமபுரியில் மாபெரும் கல்வி கடன் முகாம்!

image

தருமபுரி மாவட்டத்தில், நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் இன்று (நவ.28), மாவட்ட கூட்டு அரங்கம், ஆட்சியர் புதிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். பின், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடந்த, இந்நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி பங்கேற்றார்.

News November 28, 2025

தர்மபுரி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம்<<>> மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க..

error: Content is protected !!