News December 5, 2024

மீன் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம்- அமைச்சர்

image

பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குடிநீரில், கழிவுநீர் கலந்ததா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஏரியில் பிடித்த மீனை சாப்பிட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

Similar News

News November 28, 2025

சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் மகேஸ்வர் -ராக்கி மகேஸ்வரி தம்பதி. இவர்களது மகள் கீர்த்திகா (20), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

News November 28, 2025

சென்னை சூப்பர் வேலை; ரூ.27,000 வரை சம்பளம்!

image

சென்னையில் Field Installation Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 620 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12th, ITI/Diplamo படித்த 18-35 வயது உடைய ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ.20,000- ரூ.27,000 வரை வழங்கப்படும். இதற்கு முன் அனுபவம் ஏதும் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து வரும் டிச.15க்கும் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News November 28, 2025

சென்னை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!