News April 22, 2025
மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு “நன்னீர் மீன்வளர்ப்பு” என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் வேலை இல்லாத பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலை கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
Similar News
News November 26, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 26ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ6.10நிர்ணயம் செய்யப்பட்டது தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது
News November 26, 2025
கல்விக்கடன் முகாமில் கடன் உதவிகள் வழங்கல்!

பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாமில், பயனாளிகளுக்கு கடனுவிகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
நாமக்கல்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


