News April 14, 2025
மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
Similar News
News November 16, 2025
ராம்நாடு: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை இல்லத்தரசிகளுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 16, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
தொண்டியில் கடல் சீற்றம்; கரை தாண்டிய கடல்நீர்

தொண்டி, (நவ.15)ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பருவ நிலை மாற்றத்தால் கடல் கரை தாண்டி காணப்பட்டது. தொண்டி கடல் பகுதியானது எப்பொழுதும் அதிகமான அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக வாடை காற்று அதிகமாகி கடல் சீற்றத்துடன் கடலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வழக்கத்தை விட கரையைத்தாண்டி கடல் தண்ணீர் அலைகளுடன் காணப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


