News April 14, 2025
மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
Similar News
News November 6, 2025
ராம்நாடு: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 6, 2025
ராமநாதபுரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஜீவா நகர் நெசவாளர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான நெசவாளர் பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண், பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார்.
News November 6, 2025
ராம்நாடு: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை<


