News March 24, 2025

மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

image

ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மார்ச்.22 அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களையும் அவர்கள் விசாரித்து ராமேஸ்வரம் திரும்பிச் செல்லும் படி எச்சரித்து அனுப்பினர். அதன் பின் அவர்கள் இந்திய எல்லைகுள் மீன்களை பிடித்து நேற்று கரை திரும்பினர். இது குறித்து மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை.

Similar News

News April 19, 2025

இராமநாதபுரம்: கோடை கால இலவச பயிற்சி முகாம் – ஆட்சியர்

image

இராமநாதபுரம், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை (21 நாட்கள்) காலை, மாலை இரு வேளைகள் நடைபெறும். இதில், தடகளம், ஹாக்கி, டென்னீஸ், இறகுப்பந்து, ஜூடோ, இதர விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சி & அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலத்தில் பெயரை பதிவு செய்ய வேண்டும் – ஆட்சியர் (18 வயதிற்குட்பட்டவர்கள்)*ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

சிறுமிகளுக்கு சர்ச் பாதிரியார் பாலியல் தொந்தரவு

image

மண்டபம், கோயில்வாடி புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்தவர் ஜான் ராபர்ட் (46). இவர் 2022ம் ஆண்டு வழிபாட்டிற்கு வந்த 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். குழந்தைகள் நலக்குழுவின் புகாரில் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

News April 18, 2025

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர தேவைக்கு மேலே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்களை அழைக்கலாம்.

error: Content is protected !!