News August 9, 2024

மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

image

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும், கடந்த மார்ச் மாதம் வந்த ஏராளமான செங்கால் நாரை பறவைகள், மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்தன. தற்போது குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.

Similar News

News July 8, 2025

விருதுநகரில் நாளை பட்டா மாற்றம் செய்யலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாளை(ஜூலை.9) காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் முன்னோர்களின் பெயரில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இதில் கலந்து பாட்டாக்களை தங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

ஸ்ரீவி அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் ரமேஷ் பாபு என்ற மருத்துவரை அவரது தனியார் மருத்துவமனை முன்பு கத்தியால் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ரமேஷ் பாபு காயமடைந்தார். உடனடியாக ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 7, 2025

ராஜபாளையம்: பரியாணி கடை வைக்க ரூ.25 கோடி மோசடி

image

ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த கங்காதரன் என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு கிளை திறக்க உள்ளதாக கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பண்டிச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேரிடம் ரூ.25 கோடி வரை மோசடி செய்தார். இதில் கங்காதரனை இன்று விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!