News August 9, 2024

மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

image

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும், கடந்த மார்ச் மாதம் வந்த ஏராளமான செங்கால் நாரை பறவைகள், மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்தன. தற்போது குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.

Similar News

News December 3, 2025

விருதுநகர் மாவட்டத்தில் 36 பேருக்கு டெங்கு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் மழை தாக்கத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 6 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News December 3, 2025

அரசு மருத்துவமனை கட்டிடம் விரைவில் திறப்பு

image

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 3, 2025

அரசு மருத்துவமனை கட்டிடம் விரைவில் திறப்பு

image

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!