News August 9, 2024
மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும், கடந்த மார்ச் மாதம் வந்த ஏராளமான செங்கால் நாரை பறவைகள், மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்தன. தற்போது குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.
Similar News
News December 27, 2025
விருதுநகர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்? டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி சில்லறையை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
News December 27, 2025
விருதுநகரில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

விருதுநகரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
News December 27, 2025
விருதுநகர்: வேன் மீது மோதி நொறுங்கிய அரசு பேருந்து

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று மதியம் அரசு பேருந்து சென்றது. விருதுநகர் பட்டம்புதூர் அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற போது முன்னால் பழுதாகி நின்ற லோடு வேனின் பின்புறம் மோதியது. இதில் பேருந்தின் கண்ணாடி முகப்பு விளக்குகள் சேதமடைந்தன இரண்டு பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.


