News April 6, 2025
மின நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் 230 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நாகர்கோவில், தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய 3 இடங்களில் நேற்று (ஏப் 5) நடைபெற்றது. இந்த முகாமில் நாகர்கோவிலில் 114 மனுக்களும், குழித்துறையில் 44 மனுக்களும், தக்கலையில் 72 மனுக்களும் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 9, 2025
குமரி: ரூ.100 கோடி சுருட்டல்? போஸ்டர்களால் பரபரப்பு

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டு அவர் கட்சிப் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் போலி சான்றிதழ் தயாரித்து வழங்கிய வகையில் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் 100 கோடி ரூபாய் சுருட்டியதாக சமூக நீதி மாணவர் பேரவை என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
News December 9, 2025
குமரியில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.கன்னியாகுமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
நாகர்கோவில் ரயிலில் பெண் திடீர் பலி

நேற்று (டிச.8) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண்ணுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே, வள்ளியூர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த பெபியோலா (63) என தெரிந்துள்ளது.


