News April 6, 2025
மின நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் 230 மனுக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நாகர்கோவில், தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய 3 இடங்களில் நேற்று (ஏப் 5) நடைபெற்றது. இந்த முகாமில் நாகர்கோவிலில் 114 மனுக்களும், குழித்துறையில் 44 மனுக்களும், தக்கலையில் 72 மனுக்களும் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
கன்னியாகுமரி பேரூராட்சியில் ரூ.1.15 கோடிக்கு ஏலம்

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15 முதல் ஜன.15 வரை சீசன் காலமாகும். இந்த 60 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா். சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.


