News August 17, 2024
மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அடுத்த சிறுவாடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (56).விவசாயம் செய்து வந்த இவர், நேற்று காலை வழக்கம்போல் தனது நிலத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்காக ஒட்டிச்சென்றார். அப்போது, சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், காட்டுப்பன்றி வராமல் இருக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News December 21, 2025
விழுப்புரத்தில் பைக் – பஸ் மோதி கோர விபத்து!

விழுப்புரம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
விழுப்புரம்: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.


