News November 20, 2024
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் செல்வி. வசந்தி, ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.
Similar News
News December 8, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர் வேண்டுகோள்

நாட்டைக் காக்கும் படைவீரர் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வேண்டுகோள் விடுத்தார். படைவீரர் கொடிநாள் 2025 நிதி சேகரிப்பை உண்டியல் மூலம் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். வீரமரணம் எய்தியவர்களின் குடும்பம், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 615 பேருக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பொன்னாடை, திருமண நிதி, கல்வி உதவி உள்ளிட்ட நலனுதவிகள் வழங்கப்பட்டன.
News December 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மின் தடை

ஆற்காடு கோட்டத்தைச் சேர்ந்த திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி மற்றும் சென்னலேரி ஆகிய துணை மின் நிலையங்களைச் சேர்ந்த பகுதிகளான சாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளமபாடி, கீராம்பாடி, மாங்காடு, லாடாவரம். மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், பின்னந்தாங்கல் ஆகிய பகுதிகளில் நாளை(டிச.9) காலை 9 – மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க..


