News August 3, 2024

மின்சார ரயில் சேவைகள் ரத்து

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.3) முதல் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், இரவு 10 முதல் 11.59 வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.

Similar News

News November 13, 2025

செங்கல்பட்ட: ரூ.85,920 வரை சம்பளத்தில் வங்கியில் வேலை!

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது, விருப்பமுள்ளவர்கள் நவ-23 குள் இந்த <>லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்.

News November 13, 2025

செங்கல்பட்டு: கார் கட்டத்தில் ஒருவர் கைது

image

திருப்போரூர், தையூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த தரணிகுமார் (40) என்பவரது வீட்டில் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர், கேளம்பாக்கம், சாத்தங்குப்பத்தைச் சேர்ந்த முகேஷ் (30). கடந்த 8ஆம் தேதி, காரைச் சுத்தம் செய்வதாகக் கூறி எடுத்துச் சென்ற முகேஷ், திரும்ப வரவில்லை. தரணிகுமார் அளித்த புகாரின் பேரில், முகேஷின் மொபைல் சிக்னலை வைத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அவரைக் கைது செய்ததுடன், காரையும் மீட்டனர்.

News November 13, 2025

செங்கல்பட்டு: பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

image

திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டையைச் சேர்ந்த பவித்ரா (25) நேற்று காலை 6:30 மணியளவில், கிரிவலப் பாதையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து பவித்ரா அளித்த புகாரின்பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கிலியைப் பறித்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!