News August 8, 2024

மின்சார ரயிலை செங்கல்பட்டோடு நிறுத்தியது ஏன்?

image

ராஜ்யசபாவில் நேற்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், “திண்டிவனத்தில் ரத்து செய்யப்பட்ட உழவன், மங்களூர், சேலம், காரைக்கால் ரயில்களை இயக்க உடனடி நடவடிக்கை வேண்டும். மின்சார ரயிலை செங்கல்பட்டோடு நிறுத்தியது ஏன்? எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை மின்மயமாக்கலுடன் இரட்டைப் பாதை மாற்றப்பட்டுவிட்டதால், மின்சார ரயில்களை திண்டிவனம், விழுப்புரம் வரை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

Similar News

News September 16, 2025

செங்கல்பட்டு: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.

News September 16, 2025

தாம்பரம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் போதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த நிஷாயுதின் (30) என்பது தெரியவந்தது.

News September 16, 2025

செங்கல்பட்டை சேர்ந்தவர் மாநில தலைவராக நியமனம்

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அணி, பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தாம்பரம் மண்டலத்தில் உள்ள வழக்கறிஞர் குமரகுரு வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!