News March 24, 2025
மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசன்(30) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க கரும்பு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சிலம்பரசன் பார்க்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 24, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.23) இரவு 10 மணி முதல் இன்று (அக்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 23, 2025
அரியலூர்: கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அரியலூர் மாவட்ட கொள்ளிடம் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், கரையோர பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ துணிகள் துவைக்கவோ மீன் பிடிக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!