News March 25, 2025
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

ஊத்தங்கரை, மூன்றம்பட்டியில், பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் 5 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடிக்கம்பம் மின்சார வயரில் உரசியதால் ஐந்து பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்த்திலேயே திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
Similar News
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
News April 1, 2025
இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்து

மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் (40) டைல்ஸ் தொழிலாளி, இவர் போச்சம்பள்ளியில் இருந்து கூச்சனூர் செல்லும் சாலையில், திருவாய் மாரியம்மன் கோவில் எதிரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டதில் வினோத் குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸ்சார் உடைலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தது வருகின்றனர்.