News April 21, 2025

மின்சாரம் தாக்கி பெண் மற்றும் பசு மாடு பலி

image

திண்டுக்கல்: பாப்பனம்பட்டியைச் சேர்ந்த விக்னம்மாள் (50) என்பவர் தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் இருந்த மின்கம்பி அறுந்து அவ்வழியாக சென்ற விக்னம்மாள் மற்றும் அவரது பசுமாடு மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 3, 2026

திண்டுக்கல் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0451-2460107▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)

News January 3, 2026

திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல்லில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் நடைபெறுகின்றன.இதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல் உள்ளிட்டசேவைகளை பெறலாம். voters.eci.gov.in இணையதளம், Voter Helpline App வழியாகவும் விண்ணப்பிக்கலாம். பிப்.17 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

News January 3, 2026

திண்டுக்கல் மூச்சு திணறி குழந்தை பலி!

image

திண்டுக்கல் அருகே எரியோடு இந்திரா காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி (25).இவர் தனது மனைவி, 8 மாத ஆண் குழந்தையுடன் திண்டுக்கல் வேடபட்டியில் அவரது உறவினர் வீட்டில் குடியிருந்து வருகிறார்.கடந்த சிலநாட்களாக இவரது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை!

error: Content is protected !!