News January 22, 2025

மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

image

திருச்சியைச் சேர்ந்த சாலமன் (எ) பிரவீன் நேற்று முன்தினம் தெப்பக்குளம் பகுதியில் எலக்ட்ரீசியன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 6, 2025

சொகுசு கார் மோதி ஒருவர் பலி – போலீசார் விசாரணை

image

வையம்பட்டி அடுத்த புதுவாடி புதூரைச் சேர்ந்த கருப்பையா அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக திருச்சி To திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சொகுசு கார் மோதியதில், கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

திருச்சி: கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை

image

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் அந்தந்த பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசுக்கான கல்வி நிதியை மத்திய அரசு கடந்த அக்டோபரில் விடுவித்ததை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் 274 பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1930 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News November 6, 2025

திருச்சி: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!