News April 23, 2025

மின்சாரம் தாக்கி காய்கறி வியாபாரி பலி 

image

செங்கிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் சேக் மவுலானா (53). இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் குடிநீர் தொட்டியின் அருகில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அதன் அருகில் சென்ற சேக் மவுலானா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News November 3, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

மின் அமைப்பு தொழிலாளர் நல சங்க பொதுக்குழு

image

பட்டுக்கோட்டை தமிழ்நாடு தனியார் மின் அமைப்பு தொழிலாளர் நல சங்க அலுவலகத்தில் இன்று (02/11/25) மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மின் சாதன பொருட்கள் விற்கும் வியாபாரிகளால் சங்கத்திற்கு ஸ்பான்சர் செய்யப்பட்டு குலுக்கல் முறையில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் இதில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாலச்சந்தர், வைத்தியநாதன், கருணாநிதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News November 2, 2025

தஞ்சை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!