News March 27, 2025

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 18, 2025

கள்ளக்குறிச்சி: தீபாவளி பரிசு வழங்கிய ஒன்றிய கழக செயலாளர்.

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறு பனையூர் ஊராட்சியில், நேற்று (அக்.17) தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சிறு பனையூர் ஊராட்சி பாகம் என் 196-இல் மகளிர் அணி சேர்ந்த அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாரதிதாசன் அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார். நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News October 17, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் தங்களுக்கு உள்ள பல்வேறு விதமான பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் நேரடியாக எடுத்துரைத்தனர் இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 17, 2025

கள்ளக்குறிச்சி: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த <>லிங்கில் சென்று<<>> இன்று-17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!