News March 27, 2025

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

image

கள்ளக்குறிச்சி: வடகரைத்தாழனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி, வசந்தி தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வசந்தியிடம், பெருமணம் பகுதியைச் சேர்ந்த அஜித், வலுகட்டாயமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் நேற்று (நவ.14) அஜித்தை போலீசார் கைது செய்தனர்.

News November 15, 2025

கள்ளக்குறிச்சி: ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.14) இரவு முதல் இன்று (நவ.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியரின் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நிலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 81 பள்ளிகளில் 13 ஆயிரத்து 263 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!