News March 27, 2025
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 28, 2025
கள்ளக்குறிச்சி மாணவி சாதனை.. குவியும் பாராட்டு!

கள்ளக்குறிச்சி: கரூரில், மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில், பங்கேற்ற வேளாகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி செல்வி ஜி. கவிதா, ஏழாம் வகுப்பு கவிதை போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று அசத்தியுள்ளார். அவருக்கு இன்று (நவ.28) கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, India Post Payments Bank-ல் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 28, 2025
உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.10,000 – ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட முழுவதும் எங்கேயாவது சாலை விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள நபர்கள் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக் அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றும் நபர்களுக்கு” நல்ல சமரியான்” திட்டம் மூலம் ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்.


