News March 27, 2025
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு<
News December 7, 2025
கள்ளக்குறிச்சியில் நாள் ஒன்றுக்கு 1.04 லட்சம் மகளிர் பயணம்!

அரசு நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத் திட்டத்தை 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் ஒரு நாளைக்கு, 1.04 லட்சம் மகளிர் பயணம் செய்கின்றனர். அதன்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் அரசு நகர பஸ்களில், 11.49 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல்.
News December 7, 2025
தாயுமானவர் திட்டத்தில் 28,133 அட்டைதாரர்கள் பயன்

தமிழக அரசு வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டு குடும்பத்தினர் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவங்கி உள்ளது. இத்திட்டத்தின்படி மாதத்தின் 2வது வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 ரேஷன் கடைகளில் உள்ள 28,133 ரேஷன் கார்டுகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.


