News March 27, 2025

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 26, 2025

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஜவ்வாது உசேன் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராபின்சன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜவ்வாதுஉசேன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளராக ஜவ்வாது உசேன் இன்று (நவ.26) பொறுப்பேற்று கொண்டார்.

News November 26, 2025

ஆட்சியரகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 76 ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் தலைமையில் இன்று (நவ.26) அரசு அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியினை ஏற்று கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சியின் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்கள்..

image

கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள் – 1). அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில். 2). செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில். 3). பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில். 4). மகரூர் கைலாசநாதர் கோயில். 5). தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில். 6). ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில். இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!