News May 16, 2024
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம் பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58) மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
திருச்செங்கோடு அருகே நடந்த பகிர் சம்பவம்!

திருச்செங்கோடு அருகே சிறுமொளசி பகுதியை சேர்ந்த பழனியப்பன்(76). கடந்த 7 ஆண்டுகளாக ஏற்பட்ட கடுமையான கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால் மனஉளைச்சலில் 2ம் தேதி தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்செங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 6, 2025
நாமக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 6, 2025
நாமக்கல்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


