News May 16, 2024
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம் பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58) மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
நாமக்கல்: மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் பிரதமரின் சூரிய ஒளி மின்சார திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News December 13, 2025
நாமக்கல்:பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News December 13, 2025
நாமக்கல்லில் வரலாறு காணாத உயர்வு!

நாமக்கல் மண்டலத்தை பொறுத்தவரை, 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்த முட்டை விலை தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


