News February 17, 2025

மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை

image

மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் ஐயாசாமி (19) என்பவரை அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஐயாசாமியை வெட்டியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை ரூ.62500 வழங்கினர்.

Similar News

News November 13, 2025

காரைக்குடி: வாக்காளர் படிவங்களை பெற தொடர்பு எண்

image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த படிவங்கள் (SIR) வீடு தோறும் கடந்த 5 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. சில வீடுகளில் வாக்காளர்கள் 3 தடவை சென்றும்  வீட்டில் இல்லாத காரணத்தால் அவரவர்கள் வாக்காளர் பட்டியலை 18002339985 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என காரைக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.  

News November 13, 2025

சிவகங்கை மாவட்ட இளைஞருக்கு துபாயில் பரிசு

image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர் உலகளவில் புகைப்படத் துறையில் பல சாதனைகள் புரிந்துநேற்று 12/11/25 புதன்கிழமை துபாயில் நடந்த புகைப்பட போட்டியில் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். அவருக்கு ரூபாய் 17லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

News November 13, 2025

சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; ஜாமீன் ஒத்திவைப்பு

image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை காவலர்கள் 3 பேர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ.19க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை காவலர்கள் பிரபு, ஆனந்த், ராஜா ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

error: Content is protected !!