News October 23, 2024

மாவட்ட எஸ்பி முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு 

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். மேலும், ஆன்லைன் விளையாட்டுக்களில் உங்கள் நேரத்தையும், பணத்தையும் இழக்க வேண்டாம் என்றும்  இது போன்ற விளையாட்டுகளில் பல மோசடிகள் நடைபெற்று பலர் பணத்தை இழந்துள்ளனர் என்று பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 2, 2025

ஆம்பூர்: திருமணம் ஆகவில்லை ஏக்கத்தில் தற்கொலை

image

ஆம்பூர் இந்திரா நகர் ஜவஹர்லால் நேரு நகர் பகுதி சேர்ந்த பாலாஜி (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை என்கின்ற ஏக்கத்தில் (நவ.30) மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 1, 2025

திருப்பத்தூர் குறைத்தீர்வு கூட்டத்தில் 363 மனுக்கள்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (டிச.1) மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிடமிருந்து பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை 363 மனுக்களை ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

News December 1, 2025

திருப்பத்தூரில் நாளை தாயுமானவர் திட்டம் துவக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டம்(டிச.01) முதலமைச்சரின் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களில் நேரடியாக அத்தியாவசிய குடிமைப் பொருட்களை விநியோகம் செய்யப்பட உள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது நாளை (டிச.2 மற்றும் டிச.3 )ஆகிய இரு தினங்களில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

error: Content is protected !!