News March 28, 2024
மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மதுரை பாராளுமன்றத் தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் (General Observer) முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் தொடர்பான புகார்கள், விதிமீறல்கள் இருந்தால் அங்குள்ள தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவிடம் காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரிலோ அல்லது 8925925380 அலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
மதுரை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் OFFER

மதுரை மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News November 25, 2025
மதுரை: 25 கிலோ சைக்கிளை பற்களால் துாக்கி சாதனை

சிவரக்கோட்டை முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தகுமார் 45. பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை இலவசமாக கற்றுத்தருகிறார். சிறு வயது முதலே பற்களால் சைக்கிளை துாக்கி நின்றவாறு சாகச முயற்சியில் ஈடுபட்டார்.தற்போது 25 கிலோ எடை கொண்ட சைக்கிளை பற்களால் துாக்கியபடி 100 மீட்டர் துாரம் நடந்து சென்று சாதனை படைத்தார். அடுத்து 200 மீட்டர் துாக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
News November 25, 2025
மதுரை: மீன் பிடிக்க சென்ற முதியவர் பரிதாப பலி

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


