News August 8, 2024
மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதைப்பொருள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 8, 2026
திருவள்ளூரில் எலக்ட்ரிக் ரயில் இயங்காது!

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை செண்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று(ஜன.8) காலை செண்ட்ரலில் இருந்து 10:30 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து 10:55 மனிக்கு சென்னைகடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 8, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

தேவிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின்(81). இவர் ஐ.சி.எம்.ஆர் என்கிற மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன் தினம் தனது மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் படுகாயமடைந்த அவரை , அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு போரூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 8, 2026
திருவள்ளூரில் தீயில் கருகி பலி!

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(75). தனிய வசித்து வந்த இவர், கடந்த டிச.29ஆம் தேதி நள்ளிரவில் குளிர் காய பழைய காகிதங்களை எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றுவந்தவர், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.


