News August 8, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சட்டம்- ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம், போதைப்பொருள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 7, 2025

திருவள்ளூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறப்பு

image

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 200 கன‌அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியின் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News November 7, 2025

திருவள்ளூர் வரும் துணை முதல்வர் உதயநிதி!

image

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் & பொதுமக்களுக்கு நலதிட்டங்கள் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவ.24ம் தேதி வருகை தர உள்ளார். இந்த நிலையில், நேற்று (நவ.6) விழா நடைபெறும் இடங்களை தேர்வு செய்து அமைச்சர் நாசர் பார்வையிட்டார். உடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!