News December 4, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது

image

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து அமைப்புகள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்து போலீசார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Similar News

News November 28, 2025

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.

News November 28, 2025

குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

News November 28, 2025

குமரி: உங்கள் பெயர் நீங்கிவிடும்.. கடைசி வாய்ப்பு

image

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!