News April 14, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மையம் தொடக்கம்

நாகை மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை இன்று முதல் ஏப்ரல்.16ஆம் தேதி வரை செலுத்திட நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து , மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று முதல் நபராக வாக்கு செலுத்தினார்.
Similar News
News October 14, 2025
நாகை: தயார் நிலையில் 2500 மணல் மூட்டைகள்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்குவளை உட்கோட்டத்தில் நாகை கோட்டப்பொறியாளர் ராஜேஷ்கண்ணா அறிவுறுத்தலின் பேரில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உதவிக் கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, உதவிப்பொறியாளர் உமாமகேஸ்வரி தலைமையில் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் இணைந்து பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
நாகை: போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.30,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. பணியிடம்: தமிழ்நாடு
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 14, 2025
நாகை: ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் திறப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியா்கள், 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுட்பட்டனர். இந்நிலையில் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள 58 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் பயிா் கடன், உரம் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனா்.