News April 14, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மையம் தொடக்கம்

image

நாகை மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை இன்று முதல் ஏப்ரல்.16ஆம் தேதி வரை செலுத்திட நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து , மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று முதல் நபராக வாக்கு செலுத்தினார்.

Similar News

News November 14, 2025

நாகை: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று(நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 13, 2025

நாகை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடி ஊர்வலம் மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் புது பள்ளி தெருவில் தொடங்கி கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நாகூர் செல்ல உள்ளது. எனவே ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள தற்காலிக பந்தல் விளம்பர தட்டிகள் மற்றும் ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அகற்றுமாறு நாகை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!