News January 25, 2025
மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு

நாளை ஜன. 25 தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காலை 10.00 மணியளவில் 13-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தமிழ் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 4 பேருக்கு சிறை

கடந்த 2015-ம் ஆண்டு குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நாசரேத்தைச் சேர்ந்த தினேஷ், இசக்கிமுத்து, ஸ்டாலின், ஹைகோர்ட் துரை ஆகிய 4 பேரை குலசேகரப்பட்டினம் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 4 பேருக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
தூத்துக்குடி: தேர்வு இப்போ இல்லை.. கலெக்டர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவை., திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய 9 வட்டங்களில் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு டிச.17-லும், ஜன.2 முதல் நேர்முக தேர்வும் நடைபெற இருந்த நிலையில், இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இலம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE
News November 26, 2025
61 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 61 மனுக்கள் வர பெற்றன. இதனை ஆய்வு செய்த எஸ்பி மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


