News January 24, 2025
மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் 9 பேர் மீட்பு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 9 குழந்தை தொழிலாளர்கள், 31 வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1452 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.21 லட்சத்து 34 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 2, 2025
விருதுநகர்: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்த <
News December 2, 2025
அருப்புக்கோட்டை அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(36). கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜெயக்குமார் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் இன்று டிச.2 அதிகாலை லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜெயக்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
News December 2, 2025
விருதுநகர் அருகே வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி(25). இவர் அருகே உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று டிச.1 முனியசாமி கடையை கழுவி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து மயங்கினார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியசாமி உயிரிழந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


