News January 24, 2025
மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் 9 பேர் மீட்பு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 9 குழந்தை தொழிலாளர்கள், 31 வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1452 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.21 லட்சத்து 34 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
அருப்புக்கோட்டையில் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு

அருப்புக்கோட்டையில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஸ்மார்ட் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் இன்று (நவ.19) நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
விருதுநகர்: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை

விருதுநகர் மக்களே, ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 முதல் 33 வயதுகுட்பட்டவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளைக்குள் (நவ. 20) <
News November 19, 2025
விருதுநகர்: 15 பேரை கடித்த தெரு நாய்கள்

காரியாபட்டி ஆவியூரில் நவ.17-ல் 3 தெருநாய்கள் கடித்ததில் மணிகண்டன், தங்கப்பாண்டி, தனலட்சுமி, ஆறுமுக கணபதி, கருப்பையா என 15 பேர் பலத்த காயம் அடைந்து விருதுநகர் GH-ல் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து, நேற்று ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வெறி பிடித்த 58 நாய்களை பிடித்தது நாய்கள் காப்பகத்தில் விட்டது. மேலும் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


