News January 24, 2025
மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் 9 பேர் மீட்பு

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை 9 குழந்தை தொழிலாளர்கள், 31 வளர் இளம் பருவத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1452 முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.21 லட்சத்து 34 ஆயிரத்து 50 அபராதம் வசூலிக்கப்பட்டதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
சிவகாசி: கண்மாயில் கிடந்த சடலம்

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் சிலோன் காலனி கண்மாய் பகுதியில் முதியவர் சடலம் ஒன்று கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாரனேரி போலீசார் முதியவர் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமர் (78)என்பது தெரியவந்தது. கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
அருப்புக்கோட்டை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி சுலோச்சனா(65) உடன் காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் சென்று விட்டு பைக்கில் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராமசாமிபுரம் பகுதியில் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நிலையில் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


