News April 28, 2025
மாற்றுப் பணியில் சென்று ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் விடுத்துள்ள சுற்றறிக்கைபடி, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-25 ஆம் கல்வியாண்டு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மாற்று பணி மூலம் பணிபுரிய உத்தரவு பெற்று சென்ற அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து பள்ளி இறுதி வேலை நாளில் அவரவர்களின் பள்ளியில் மீண்டும் சேர மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News November 23, 2025
நெல்லை: திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கங்கைகொண்டான் கண்ணன் கோயில் தெருவை சேர்ந்த ராம்குமாரின் சகோதரிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதனால் வீட்டில் பந்தல் ஒலிபெருக்கி அமைக்கும் பணி நடந்தது. அப்போது ராம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து ஒலிபெருக்கியை மாற்றினார். எதிர்பாராத விதமாக ராம்குமார் மீது மின்சாரம் தாக்கியது. ராம்குமாரை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News November 23, 2025
நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 23, 2025
நெல்லை: 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்

மானூர் அலவந்தான் குளம் பகுதியை சேர்ந்த அருள் சேவியர் அங்குள்ள 11ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் அருள் சேவியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாளை சிறையில் அடைத்தனர்.


