News March 26, 2025
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஒருநாள் சுற்றுலா

மாற்றுத்திறனாளி குழந்தைகளை திருச்சி மாவட்டம் பறவைகள் பூங்கா, அண்ணா அறிவியல் கோளரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்காக நேற்று (24.3.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் (ம) குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,90,490 வாக்காளா்கள் உள்ளனர்.
News December 1, 2025
களரம்பட்டி: ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியின் அவல நிலை

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தில், அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளியின் ஓடுகள் முற்றிலும் சேதமடைந்த இடங்களில் பேனர்கள் வைத்து மழைநீர்கள் வராத அளவுக்கு மறைத்துள்ளனர். மேலும் இந்த அவலநிலை மாணவர்களுக்கு பெரிய விபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News December 1, 2025
பெரம்பலூர்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் அழைத்து சென்று மீண்டும் வரும் பொழுது அவர் தப்பியோடினார். இதனால் கைதியை கவனக்குறைவாக அழைத்துச் சென்ற சூரியகுமார், பிரேமா ஆகிய இரண்டு காவலர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


