News March 27, 2025

மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயண சலுகை அட்டையினை வருகின்ற 30.06.2025 வரை பயன்படுத்தி, கட்டணமில்லா பயணச் சலுகையினை பெறலாம். மேலும் வருகின்ற 01.04.2025 மற்றும் 02.04.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

சிவகங்கை: Driving Licence-க்கு முக்கிய Update!

image

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கு கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 13, 2025

சிவகங்கை மாவட்ட மக்களே., இன்று விரைவில் தீர்வு!

image

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதிபதியுமான அறிவொளி நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிவகங்கை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (டிச.13) 11 அமா்வுகளில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நிலுவையிலுள்ள தங்களது வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

News December 13, 2025

சிவகங்கை: பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்.!

image

கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி, மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு வந்த திருடர்கள் சமையல் அறையில், சத்துணவு முட்டைகளை, கேஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்டு விட்டு கணினி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!