News March 27, 2025
மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயண சலுகை அட்டையினை வருகின்ற 30.06.2025 வரை பயன்படுத்தி, கட்டணமில்லா பயணச் சலுகையினை பெறலாம். மேலும் வருகின்ற 01.04.2025 மற்றும் 02.04.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
காரைக்குடி: மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

காரைக்குடி அருகே உள்ள சங்கதிடல் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (19). அவர் வீட்டு மாட்டுக் குட்டகையில் தகரத்தை சீரமைக்கும் பணியில் சுரேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் செய்தனர். அப்போது, அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் தகரம் அழுத்தியதால் மின்சாரம் தாக்கி சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 3, 2026
சிவகங்கை: 12th படித்தால் ஆதாரில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் <
News January 3, 2026
காரைக்குடி: ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்பு

காரைக்குடி அருகே உள்ள கொத்தாரி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுதாவின் ஒன்றரை வயது மகள் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுதா கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, சிறுமி காணாமல் போயிருந்ததையடுத்து, தேடிப் பார்க்கையில் அருகில் உள்ள குளத்தில் சிறுமி இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாார். இதுகுறித்து பள்ளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


