News March 27, 2025
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
ஈரோடு: 10th போதும் மத்திய அரசு வேலை APPLY NOW

ஈரோடு மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
யாருக்காவது நிச்சயம் பயன்படும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
சென்னிமலை அருகே பெண் விபரீத முடிவு

சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்பிரியா (34). இவர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த மாதம் 15-ம் தேதி வீட்டில் இருந்த தின்னரை உடலில் ஊற்றித் தீக்குளித்தார். உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் 18 நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 6, 2025
ஈரோட்டில் கோடி கணக்கில் மோசடி: அதிர்ச்சி

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தனியார் சங்கம் சார்பில் அதன் கணக்காளர் ராஜேந்திரன் என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பல லட்சங்களை முதலீடு செய்த நிலையில், பணத்தை திரும்பத் தராமல் ரூ.4 கோடி மோசடி செய்ததோடு ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளனர்.


