News April 17, 2025
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை அனுப்ப மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை மாநில ஆணையர், எண்.05, காமராஜர் சாலை, லேடி வெலிங்கடன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ (30.04.2025) ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499933236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
சங்கரன்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் அக்டோபர் 2025 இன் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2025 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்திற்கு சங்கரன்கோவில் வருவாய் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
News October 18, 2025
மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுங்கள் – ஆட்சியர்

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோர், பொதுமக்களுக்கு ஒலி, மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தீபாவளி அன்று காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சரவெடிகளைத் தவிர்த்து, மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைப் பகுதிகள் அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
News October 17, 2025
தென்காசி வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வருகை புரிந்து விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குரிய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்