News November 23, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜோலாா்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டு போட்டியை மாவட்ட விளையாட்டு நல அலுவலர் இனியன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகளில் 12 வயது முதல் 17 வயது வரை நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஓட்ட பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
Similar News
News December 13, 2025
ஆம்பூர்: மினி லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச-13) அதிகாலை விபத்து ஏற்பட்டது. சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்ற டாடா ஏஸ் மினி லாரி மீது, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநரான நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (38) படுகாயம் அடைந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
திருப்பத்தூர்: கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம்

கொச்சியைச் சேர்ந்த சுசில் மேத்யூ (61) என்பவர் தனது காரில் வேலூரில் இருந்து கேரளா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். ஆம்பூர் கன்னிகபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையைக் கடக்க முயன்ற ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியைச் சேர்ந்த வேலாயுதம் (40) மீது அவரது கார் மோதியது. இந்த விபத்தில் வேலாயுதம் படுகாயமடைந்தார். போலீசார் அவரை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News December 13, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் நாளை (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


