News September 9, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றதில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் மற்றும் உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் உலகநாதன் உடன் இருந்தார்.
Similar News
News April 29, 2025
புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 மட்டுமே கட்டணம் ஆகும். இந்த வாய்ப்பினை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.
News April 28, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (28.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை.

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..