News August 3, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்.பி

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வைத்து ஆர்.இ.சி.எல். சமூக பொறுப்புணர்வு நிலையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நவ.20ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News November 18, 2025
தூத்துக்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நவ.20ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News November 18, 2025
தூத்துக்குடி: தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மன்ற அலுவலகம்

கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஊராட்சி செயலாளர் நாகராஜ் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென அலுவலகத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சில ஆவணங்கள் தீயில் கருகி உள்ளது.


