News June 26, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 8,165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52,39,17,045 மதிப்பில் பராமரிப்பு உதவிதொகை, 2,277 பேருக்கு கல்வி உதவிதொகை, 1,249 பேருக்கு ரூ.1,51,35,536 மதிப்பில் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் உள்பட மொத்தம் 50,236 பேருக்கு ரூ.61,57,34,367 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Similar News
News December 10, 2025
கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில்,<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
கடலூர் எஸ்.பி.க்கு நினைவு பரிசு வழங்கல்

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடந்த 2005 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ஆக பணிபுரிந்த போது பவாரியா குற்றவாளிகளை பிடிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதையடுத்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரை, பூவானிக் குப்பம் அரசு பள்ளியில் கடந்த 1981- 82-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் நேற்று சந்தித்து நினைவுபரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
News December 10, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான “கபீர் புரஸ்கார்” விருது ஆண்டுதோறும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. சமுதாய நல்லிணக்கத்தை காப்பதற்காக சிறப்பாக செயல்புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை பெற விரும்புவோர் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


