News June 26, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 8,165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52,39,17,045 மதிப்பில் பராமரிப்பு உதவிதொகை, 2,277 பேருக்கு கல்வி உதவிதொகை, 1,249 பேருக்கு ரூ.1,51,35,536 மதிப்பில் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் உள்பட மொத்தம் 50,236 பேருக்கு ரூ.61,57,34,367 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

Similar News

News November 4, 2025

கடலூர்: 8 பி.டி.ஓ-க்கள் அதிரடி இடமாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி, முருகன், பாலாமணி, ஜெயக்குமார், லட்சுமி, சங்கர், செந்தில் வேல் முருகன், வீராங்கன் ஆகியோர் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 4, 2025

கடலூர்: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

image

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 28 வயது கூலி தொழிலாளி. இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தனது மகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

News November 3, 2025

கடலூர்: 12th போதும், ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) காலியாக உள்ள 1429 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு குறைந்தது 12-ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!