News April 26, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்

Similar News

News November 13, 2025

தேனி: 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 13, 2025

தேனி: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

image

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 13, 2025

தேனியில் பயங்கரம் ஜீப் மீது பஸ் மோதி 14 பேர் படுகாயம்

image

கம்பம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 16 பெண் தொழிலாளர்கள் நேற்று (நவ.12) குமுளி அருகே 8.ம் மைலில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். 8.ம் மைல் அருகே சென்ற போது ஜீப் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் மலர்கொடி, ராதா, சிட்டம்மாள், பிரியா, ரெஜினாதேவி, சவுந்தர்யா, ரோகினி, பாலம்மாள், மலர்கொடி, சுவேதா, வளர்மதி, அமுதா உட்பட 14 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.

error: Content is protected !!