News April 26, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்

Similar News

News December 9, 2025

தேனி: கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட்

image

காமாட்சிபுரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தற்காலிக கணினி இயக்குநராக பணிபுரிந்தவர் 3 ஆண்டுகளுக்கு முன் நிரந்தர பணியாளராக மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்த ஆய்வில் அந்த பணியாளர் முறைகேடாக நிரந்த பணியாளராக மாற்றியது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறி எரசக்கநாயக்கனுார் கூட்டுறவு சங்க செயலாளர் ராமரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர் நர்மதா உத்தரவிட்டுள்ளார்.

News December 9, 2025

தேனி: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

image

தேனி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News December 9, 2025

தேனி: கஞ்சா கடத்திய பெண் கைது

image

மதுரை மாவட்டம் ஆரப்பாளத்தை சேர்ந்த மாயி மகன் தங்கப்பாண்டி (32). மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி இந்துமதி (39). இவர்கள் இருவரும் தேனி புதிய பேருந்து நிலையத்தில் கஞ்சா கடத்த முயன்றுள்ளனர். இருவரிடமிருந்தும் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தேனி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

error: Content is protected !!