News April 26, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
Similar News
News November 25, 2025
போடி அருகே பெண்ணை கடத்திய தாய் உள்ளிட்ட 7 பேர் கைது

போடி மேலச்சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்துராணி (55). இவரது மகன், தீபா (36) என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா உள்ளிட்ட 7 பேர் இந்துராணியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி, கடத்தி வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்து உள்ளனர். அங்கிருந்து தப்பிய இந்துராணி அளித்த புகாரில் போடி தாலுகா போலீசார் தீபா உள்ளிட்ட 7 பேரை கைது (நவ.24) செய்தனர்.
News November 25, 2025
தேனி: ரூ.10,000 பரிசுத் தொகை அறிவித்த கலெக்டர்

தேனியில் 4வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக இலச்சினையை (LOGO) கருத்துருவுடன் (THEME) வடிவமைத்து, தங்களது முழு முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் அல்லது thenipro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 5.12.2025க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.10000 பரிசு வழங்கப்படும் என்று கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்
News November 24, 2025
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் (நவ.28) காலை 10:30 மணிக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயனடையலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


