News April 26, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
Similar News
News December 3, 2025
தேனி: சண்டையை தடுத்தவருக்கு அரிவாள் வெட்டு!

பெரியகுளம் அருகே கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வம், சாம் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். சண்டையை முத்துச்சாமி விலக்கி விட்ட நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து அரிவாளால் முத்துசாமியை தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் தாக்கிய இருவர் மீதும் வழக்கு (டிச.2) பதிவு.
News December 3, 2025
தேனி: இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்..!

தேனி மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 3, 2025
தேனி: இளம் பெண்ணிடம் ரூ.6.30 லட்சம் மோசடி

தேனி, கோட்டைப்பட்டியை சேர்ந்த பானுமதி (30) அரசு ஐடிஐ.,யில் பிட்டர் படித்து அப்ரண்டிஸாக அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் 2019ல் பயிற்சி பெற்றார். இவருக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணியாற்றும் பழனிவேல் என்பவர் ரூ.6.30 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளார். தேனி போலீசார் பழனிவேல் மீது நேற்று (டிச.2) வழக்கு பதிவு.


