News April 26, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்
Similar News
News December 10, 2025
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 10, 2025
தேனி: பெண் தூக்கிட்டு தற்கொலை

இராஜதானி அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகு (44). இவருக்கு சற்று கண் குறைபாடு உள்ள நிலையில் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கண் குறைபாடு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த நாகு நேற்று (டிச.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 10, 2025
தேனி: வெந்நீரில் தவறி விழுந்து குழந்தை பலி!

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தம்பதி ராஜேஷ்கண்ணன்- கீர்த்திகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டிச.1 அன்று கீர்த்திகா, வெந்நீர் வைத்து விட்டு துணி எடுக்க சென்றபோது அங்கு 2வது மகள் பிரணிவிகா ஸ்ரீ வெந்நீரில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.


