News March 24, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

அரசு பஸ் பாஸ் இணையதளம் வாயிலாக உடனுக்குடன் பெறுகின்ற வசதியினை செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில் ஏற்கனவே பயன்படுத்தி வரும் 31-03-2025 வரை செல்லத்தக்க பாஸ்களை 30-06-2025 வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துமாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம். நாளை மறுநாள் நடைபெறவிருந்த முகாம் ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

நெல்லையில் 186 புதிய வாக்கு சாவடிகள்

image

நெல்லை மாவட்டத்தில் 1,490 வாக்குச்சாவடிகளில் 375 பிரிக்கப்பட்டு, 186 புதியவை சேர்க்கப்பட்டு மொத்தம் 1,676 ஆக உயர்கிறது. 189 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். 26 இடங்கள் மாற்றம், 10 பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றியமைப்பு, 6 பள்ளிகளின் பெயர் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கருத்துகள், ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டார் .

News September 18, 2025

நெல்லை: ரயில் நிலையத்தில் கொலை

image

நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு பயணிகள் 3 பேரை வாலிபர் தாக்கியதில் கோவை முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பீகார் மாநிலம் மண்டூலாவை சேர்ந்த சூரஜ் 25 என்பவரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் விழிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக என சந்தேகிக்கின்றனர்.

News September 18, 2025

நெல்லை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்

image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தவசிக்கனி, மனைவி அன்னசெல்வத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, மது அருந்த பணம் கேட்டு அன்ன செல்வம் மறுத்ததால் ஆத்திரமடைந்த தவசிக்கனி, அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அன்ன செல்வம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுக்குறித்து களக்காடு போலீசார் விசாரணை.

error: Content is protected !!