News June 28, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 21, 2025
வேலூர்: உள்ளாடையுடன் சில்மிஷம் செய்த நபர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார்(23). இவர் மது அருந்திவிட்டு கடந்த 18ஆம் தேதி இரவு உள்ளாடையுடன் தெருக்களில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் காட்பாடி போலீசில் புகார் அளித்த நிலையில், நேற்று (நவ.20) அவர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 21, 2025
வேலூர்: 10th முடித்தால் உளவுத்துறையில் வேலை ரெடி!

வேலூர் மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
News November 21, 2025
வேலூர்: பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் காதலி!

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த இசைக்கலைஞர் (38), 2008ல் கல்லூரி படிக்கும் போது பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். அப்போது அந்த பெண் கர்ப்பமடைந்தது வீட்டாருக்கு தெரிந்த நிலையில், 2 பேரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அந்த பெண், இசை கலைஞருக்கு ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, அந்நபர் நேற்று (நவ.20) பாகாயம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


