News March 27, 2025
மாற்றுத்திறனாளிகளின் சலுகை பேருந்து பயண அட்டை காலம் நீட்டிப்பு

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
வேலூர்: விபத்தில் வாலிபர் துடிதுடித்து பலி!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (24). இவர் நேற்றிரவு பேரணாம்பட்டு அருகே உள்ள நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் வந்துள்ளார். அப்போது பக்காலாபல்லி அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
வேலூர்: 8 பவுன் நகை திருடிய 2 பெண்கள்!

விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(41). இவருடைய மணைவி இளையராணி(37) . கடந்த அக்டாபர் மாதம் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் 8 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த விசாரணையில், கீழ்தளத்தில் குடியிருக்கும் லட்சுமி, அஞ்சலி ஆகியோர் தங்களது கணவர்கள் உதவியுடன் திருடியது தெரியவந்தது.
News December 14, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.14) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


