News May 8, 2025

மார்கழியில் மட்டுமே காட்சி தரும் மரகத லிங்கம்!

image

நாமக்கல்: திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு மார்கழி மாதம் மட்டும் மரகத லிங்கம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இந்த மரகத லிங்கத்தை தரிசனம் செய்ய காலை 5 மணிக்குள் கோவிலில் இருக்க வேண்டும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 21, 2025

நாமக்கல் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து நாளை (நவ.22) திருப்பதி, கர்னூல், ஹைதரபாத் போன்ற பகுதிகளுக்கு செல்ல 16733 ராமேஸ்வரம் – ஓகா விரைவு ரயில், காலை 4:30 மணிக்கும், 16354 நாகர்கோவில் – காச்சிகுடா விரைவு ரயில் மாலை 5:40 மணிக்கும் செல்வதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம் என நாமக்கல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News November 21, 2025

நாமக்கல் மக்களே ரெடியா?

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. பல தனியார் நிறுவனங்கள் மேலாளர், கணினி இயக்குபவர், மார்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேலாளர், டீம் லீடர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளுக்கு ஆட்களை நேரில் தேர்வு செய்ய உள்ளனர். அனைத்து கல்வித் தகுதியுடையோர் காலை 10.30 மணிக்கு கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News November 21, 2025

திருச்செங்கோடு அருகே நேர்ந்த சோகம்!

image

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பில்ட்டு மஞ்சிஹி (28) மற்றும் சோபியா (23) தம்பதி மொஞ்சனூர் அரசம்பாளையம் கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையிலான தகராறுக்குப் பிறகு மஞ்சிஹி வேப்பமரத்தில் தூக்கிட்டு கொண்டார். மனைவி மீட்டாலும், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எலச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

error: Content is protected !!