News April 9, 2025
மாம்பழம் படைத்தால்.. திருமணம் நடக்கும்!

சேலம் மாவட்டம் குமரகிரியில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. மேலும், இங்கு தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 9, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், இளங்கலை மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறதாகவும், தகுதியுள்ள மாணவ, மாணவிகள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 31-12-2025க்குள் http://umis.tn.gov.in/ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
News December 9, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News December 8, 2025
சேலம்: முதல் நிலை சரிபார்த்தல் – ஆட்சியர் தகவல்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 2026 தேர்தலில் சேலத்தில் பயன்படுத்தப்படும் 8,412 வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,888 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்கு அளிக்கும் கருவிகளை பெங்களூர் பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், வருகின்ற டிசம்பர்-11ம் தேதி முதல்நிலை சரிபார்த்தல் பணி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.


