News April 6, 2025
மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் உள்ள ஹோட்டலில் இன்று (ஏப்ரல் 6) மாமூல் கேட்டு மிரட்டிய புகாரில் அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி அப்துல் ரகுமானிடம் மாமூல் கேட்டு மிரட்டிய அதிமுக 120ஆவது வட்ட செயலாளர் ஐஸ்அவுஸ் மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூர்த்தியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News April 12, 2025
இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியீடு

சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதியில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் விவரங்களை சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது. காவல் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவைக்கு உடனடியாக அழைக்கலாம் எனவும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News April 12, 2025
கடன் தொல்லையை நீக்கும் கங்காதீசுவரர்

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். சென்னை புரசைவாக்கத்தில் பிரசித்திபெற்ற கங்காதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 12, 2025
கனிமங்கள் எடுத்து செல்ல ஆன்லைன் மூலம் அனுமதிச் சீட்டு

சென்னை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணியில் கிடைக்கப்பெறும் மண், சக்கை கல் உள்ளிட்ட கனிமங்களை அப்புறப்படுத்துவதற்கு வரும் 28-ந் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சீட்டுகள் மூலம் கனிமங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது என சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார்.