News April 6, 2024

மாமனார் தாக்கியதில் மருமகன் பலி

image

தூத்துக்குடி மாவட்டம் எத்திலநாயக்கன்பட்டியை   சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை பார்ப்பதற்காக கயத்தாறு அருக வடக்கு சுப்பிரமணியபுரத்திற்கு சென்ற போது அவரது மாமனார் குருசாமி உட்பட 3 பேர் இவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கயத்தாறு போலீஸார் குருசாமி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

கீழஈராலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

கீழ ஈராலில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் ஏப்.22 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வங்கி, காப்பீட்டு நிறுவனம், மென்பொருள் நிறுவனம் கலந்து கொள்ள இந்த முகாமில் 10 முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9442961164.7812877818 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 19, 2025

பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

image

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 19, 2025

தூத்துக்குடியில் சுற்றி பார்க்க வேண்டிய 10 இடங்கள்

image

▶️திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
▶️மணப்பாடு கடற்கரை
▶️தேரிக்காடு
▶️தூய பனிமய மாதா பேராலயம்
▶️கழுகுமலை வெட்டுவான் கோயில்
▶️வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
▶️வெளிமான் காப்பகம்
▶️மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணி மண்டபம்
▶️மயூர தோட்டம்
▶️உப்பளம்

error: Content is protected !!