News February 28, 2025
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சேலம் கலெக்டர் பிருந்தா தேவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் மார்ச் 8ஆம் தேதி ஆத்தூர் தேவியா குறிச்சியில் உள்ள தாகூர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலை வாய்ப்பற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறாலம்.
Similar News
News March 1, 2025
‘SAY NO TO DRUGS’ சேலம் போலீசார் பதிவு

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பிப்ரவரி 28 ‘SAY NO TO DRUGS’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யவும்.
News February 28, 2025
குழந்தை பாலினம் விவகாரம்- 9 பேர் சஸ்பெண்ட்

சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில் குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15,000 வசூல்.புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்து வந்த அரசு மருத்துவர் முத்தமிழ்,செவிலியர்கள் 6 பேர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்.ஸ்கேன் சென்டருக்கு சீல்- ஸ்கேன் சென்டரில் இருந்த இயந்திரங்களும் பறிமுதல்.
News February 28, 2025
சேலத்தில் 100 வயதை கடந்த பாட்டிக்கு சதாபிஷேக விழா

சேலம் குகையில் அருணாச்சல ஆசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி. இவருக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி அவர்களும் பேரன், பேத்திகளுடன் சேலம் குகையில் வசித்து வருகின்றனர். ஐந்து தலைமுறையை பார்த்த மூதாட்டி சரஸ்வதிக்கு இன்றுடன் 100 வயது பூர்த்தியாகிவுள்ளது. இதனை குடும்ப உறுப்பினர்கள் விழாவாக நடத்த முடிவு செய்து, இன்று சதாபிஷேக விழாவை உற்சாகமுடன் கொண்டாடினர்.